கதை அப்புறம். சம்பளம் தான் ஃபர்ஸ்டு. ஓவியாவின் பாலிசி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லைம்லைட்டுக்கு வந்துவிட்டார் ஓவியா . அவரை புக் பண்ண கோலிவுட் ஆட்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். நடிகை இனிமேல் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது. இது எல்லாமே கொஞ்ச காலம் தான்.காற்று இருக்கும்போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று கதை கூட கேட்காமல் சம்பளத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறாராம். வருகிற தயாரிப்பாளர்களிடம் எல்லாம் அட்வான்ஸ்களாக வாங்கி குவிக்கிறாராம். ஒரு பக்கம் ஆர்மியில் இருக்கும் மேஜர்கள் நடிகை இப்படி நடிக்க கூடாது அப்படி நடிக்க கூடாது என்று வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்க நடிகை அதுபற்றியெல்லாம் கவலையே படுவதில்லை